பொழுது போக்குக்காக மட்டும் இல்ல... நான் பார்த்தது , கேட்டது , படித்தது , ரசித்தது மற்றும் என்னுடைய எண்ணங்களை உங்களுடன் பகிர்ந்து கொள்ள ஒரு இணைப்புப்பாலம் ...
தங்கள் கருத்துக்களை தயவுசெய்து பதிவு செய்யவும்...ஃபேஸ்புக்கில் பார்க்க http://www.facebook.com/Srivalaipakkam

புதன், 5 செப்டம்பர், 2012

அறிவோம் நம் கலையை...

பரதநாட்டியம் :
 
பரதநாட்டியம் -திற்கு புகழ் பெற்ற ஊர்னாலே தமிழ் நாடுதான்ங்க.தமிழ் நாட்டிற்கு பாரம்பரிய பெயர் சேக்குறதுல இந்த பரதநாட்டியமும் ஒன்று.இந்த பரத நாட்டியத்தை பற்றி சில விஷயங்களை தெரிஞ்சிக்குவோமே..
 
புராணப்படி சொல்லனும்னா பரத முனிவரால உருவானதால பரதம்னு பெயர் வந்ததாகவும் ,அதே நேரத்துல பரதம் அப்படினா ப-பாவம்,ர-ராகம்,த-தாளம் என்ற 3 -ஐயும் குரிப்பிட்ரதாகவும் சொல்லபடுது.
 
உடல் அசைவுகளும் ,கை முத்திரைகளையும் சேர்த்து 'அடவு'  என்று  வழங்கப்படுகிறது.சுமார் 120 அடைவுகள் உள்ளன.பல அடைவுகள் சேர்ந்தது 'ஜதி' எனப்படும்.
 
பாரதனாட்டியதுல ரொம்ப முக்கியமானது 'அபிநயம்'.கருதியோ,உணர்வையோ வெளிப்படுத்த இது ரொம்ப உதவுது.அபிநயம் மூலமா ஒரு கருத்தை மத்தவங்களுக்கு நாம உணர்த்தலாம்.அபிநயம் இரண்டு வழிகளால்   சித்தரிக்கப்படுது.  ஒன்று உலக வழக்கு.இது 'லோகதர்மி' எனப்படும்.மற்றொன்று நாடக வழக்கு.இது 'நாடக தர்மி' எனப்படும்.பரதநாட்டியத்தில்ஆகார்ய   அபிநயம்,வாசிக அபிநயம்,ஆங்கிக அபிநயம்,சாத்விக அபிநயம் என  நான்கு விதமான அபிநயங்கள் பயன்படும்..
 
ஆகார்ய   அபிநயம் :
  அலங்காரம்  மூலமா  அபிநயிக்கறது .அதாவது முக ஒப்பனை,உடை,அணி அலங்காரம்,மேடை அமைப்பு ஆகியவை இந்த  பரதநாட்டியத்தில் முக்கிய இடம் பெரும். வேற ஒருத்தங்கள போல வேஷம் போட்டு ஆடறது.
 
வாசிக அபிநயம்:
           இதுல பாடல் தான் முக்கியம்.அந்த பாட்டோட பொருளுக்கு(அர்த்தத்துக்கு) ஏத்தமாதிரி அபிநயிப்பாங்க.
ஆடுரவங்களே   பாட்டு பாடியும் அபிநயிக்கலாம்,இல்ல வேற ஒருத்தங்க பாட அந்த பாட்டுக்கு ஆடுறவங்க அபிநயிக்கலாம்.
 
ஆங்கிக அபிநயம்:
   உடல் உறுப்புகாளால உள்ளதுல இருக்குற உணர்வை அபிநயிக்கறது.அதாவது ஒரு ஒரு உடல் உறுப்புக்கும் தனி தனி செய்கைக உண்டு.இதுல கை முத்திரை சிறப்பிடம் பெரும்.கைமுதிரைனா  விரல்களின் செய்கைகள்.பாரதனாட்டியதுல ஒற்றைக்கை முத்திரை .இரட்டைக்கை முத்திரை உண்டு.
 
சாத்விக அபிநயம்
 உள்ளத்தில் எழும் உணர்சிகளால் உடலில் மாற்றங்கள் ஏற்ப்படும் .அதாவது நமக்கு பயமா இருந்ததுனா உடல் வேர்க்கும்,நடுங்கும்,கண் சொருகும் இதை ஆடலில் காட்டுவது தான்  சாத்விக அபிநயம்..
 
   9 சுவை உணர்வுகள் உண்டு அதை தான் நவரசம்னு சொல்வாங்க.ஒன்பான் சுவை-னும் சொல்வான.அது என்னென்னனா பயம்,வீரம்,இழிப்பு,அற்புதம்,இன்பம்,அவலம்,நகை,கோவம்,நடுநிலை .இஹை எல்லாம் கண்கள்,உடலசைவு,உடல்நிலை,கைமுதிரைகள் மூலமா அபிநயிக்கறது.
 
பாவங்கள்:
   அபிநயத்தில் குறிப்பிடப்படும் பாவங்கள் அதாவது  உணர்வுகள் 9 வகைப்படும்.ஸ்ருங்காரம்(வெட்கம்),வீரம்,கருணை,அற்புதம்,ஹாஸ்யம்(சிரிப்பு),பயானகம்(பயம்),பீபல்சம்(அருவருப்பு),ரௌத்ரம்(கோபம் ),சாந்தம்(அமைதி)

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக